Wednesday, June 17, 2015

திகில் கதை

இது முழுதும் கற்பனையே. எனது கனவில் கண்ட காட்சி இது.

அந்த போலிஸ் ஸ்டேஷனுக்கு அன்றுதான் மாறுதலாகி பணியில் சேர்ந்திருந்தார் ஆய்வாளர் அமரன். இரவு உதவி ஆய்வாளருடன் ரோந்து சுற்றி வரும்போது ஒரு பஸ் மிக வேகமாக தன்னைத் தாண்டிப் போவதைக் கண்டு விசில் ஊதினார். பஸ் நிற்கவில்லை. உடனே இவர் ஓடிச் சென்று அந்த பஸ்ஸைப் பிடித்து அதில் தவி ஏறினார். என்ன விந்தை!பஸ் சில் ஒருவரும் இல்லை. காலியாக இருந்தது. ஆனாலும் பேச்சுக் குரல்கள் கேட்டன. ஒரு மனிதன் ஏறிவிட்டான் கீழே தள்ளுங்கள் என்ற குரல் ஒலித்தது. இவர் உடனே கீழே தள்ளப்பட்டார்.

கீழே விழுந்தவரை உதவி ஆய்வாளர் எழுப்பி நிற்க வைத்தார். அந்த பஸ் அருகிலிருந்த ஒரு மலையின் மீது ஏறி விழுந்தது. மனிதர்களின் மரண ஓலக் குரல்கள் கேட்டன. பின்பு அமைதியானது. அமரனுக்கு ஒன்றும் புரியவில்லை. இது பற்றி உதவி ஆய்வாளரிடம் விளக்கம் கேட்டபோதுதான் இம்மாதிரி நிகழ்வு சென்ற இரண்டு ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் அந்த பஸ் சில் இருந்தது மனிதர்கள் அல்ல என்றும் விபத்து ஒன்றில் மாண்டுபோனவர்களின் ஆவிகள் என்றும் தெரிந்தது.

அமரன் இதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கினார். இதற்கொரு முடிவு கட்டவேண்டும் என்று முடிவு செய்தார்.

மறுநாள் பஸ் உரிமையாளருடன் சென்று பள்ளத்தில் கிடந்த பஸ் சை தூக்கி மேலே கொண்டு வந்தார். அதிக சேதம் இல்லையென்றாலும் 5000 வரை செலவு  செய்து பஸ் சை பழைய நிலைக்கு கொண்டு வந்தார்.  பஸ் சின் எண் எம் டி ஒய் 8888 என்பது. இந்த நம்பர் பிளேட்டை என்னுடைய ஜீப்பில் மாற்றுங்கள். என் ஜீப்பின் நம்பரை (எம் டி ஒய் 4000) உங்கள் பஸ் ஸில் மாட்டுங்கள் என்றார் அமரன். அப்படியே செய்யப்பட்டது.

அடுத்த ஆண்டு அந்த நாள் வந்தது. பஸ் திருடப்படவில்லை. பல பேச்சுக் குரல்கள் கேட்டன. என் பஸ் வரவில்லை? என ஆவிகள் எல்லாம் அலைந்தன. 12 மணி அடித்ததும் ஆவிகள் அனைத்தும் ஓலமிட்டபடியே  மலையில் ஏறி கீழே விழுந்தன. காற்றோடு கரைந்து மறைந்தன. அமரன் தனது சாதுர்யத்தால் இதை செய்தார்.

2 comments:

  1. Wonderful story. Keep it up1

    ReplyDelete
  2. அருமையான திகில் கதை. தொடர்ந்து எழுதுங்கள் விக்டர் அவர்களே.

    ReplyDelete